திடீர் மின்வெட்டு: இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்


திடீர் மின்வெட்டு: இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்
x
தினத்தந்தி 17 Jun 2019 11:15 PM GMT (Updated: 17 Jun 2019 8:14 PM GMT)

திடீர் மின்வெட்டு காரணமாக தென்அமெரிக்க நாடுகள் இருளில் மூழ்கியது.

பியூனோஸ் அயர்ஸ்,

தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய 2 நாடுகளும் திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கின.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது. மேலும் மின்வெட்டு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பும் முடங்கியது.

இந்த திடீர் மின்வெட்டு காரணமாக 2 நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பிரேசில் மற்றும் பராகுவேயின் சில பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.

பலமணி நேரங்களுக்கு பிறகு படிபடியாக மின்இணைப்பு சீரடைய தொடங்கியது.

அர்ஜென்டினாவில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு 56 சதவீத மின்இணைப்பு திரும்ப கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் உருகுவேயிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான மின்இணைப்பு கிடைத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.


Next Story