ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 18 பேர் பலி
ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அண்டை நாடுகளுடன் எல்லை பகுதியை கொண்டிருக்கும் ஈராக்கின் அன்பர் பாலைவன பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் பொதுமக்களை கடத்தி செல்வது அல்லது கொலை செய்வது தொடர்ந்து வருகிறது.
அவர்களை கட்டுக்குள் கொண்டு வர ஈராக் பாதுகாப்பு படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள ஆகாஷத் பகுதியில் பதுங்கு குழி மீது நடந்த வான்வழி தாக்குதலில் 4 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் எல்லையையொட்டிய கிழக்கு பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 4 ஐ.எஸ். தீவிரவாதிகளும், மொசூல் நகரின் மேற்கே ஈராக் படையினரின் தாக்குதலில் 2 ஐ.எஸ். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களின் வாகனங்களும் சேதமடைந்தன.
சுரங்க பகுதியின் மீது நடந்த மற்றொரு வான்வழி தாக்குதலில் உள்ளே பதுங்கியிருந்த 5 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகினர். சிரிய எல்லையை ஒட்டிய பாலைவன பகுதியில் அமெரிக்க கூட்டணி படையின் வான்வழி தாக்குதலில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் ஈராக் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர வேட்டையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுவதும் தோற்கடிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதிகள் அல்லது பாலைவன பகுதிகள் மற்றும் கரடுமுரடான பகுதிகளில் தஞ்சமடைந்து கொண்டு பாதுகாப்பு படையினர் மீதும் மற்றும் பொதுமக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story