ஈராக்கில் துருக்கி துணை தூதர் உள்பட 3 அதிகாரிகள் சுட்டுக்கொலை
ஈராக்கில் துருக்கி துணை தூதர் உள்பட 3 அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாக்தாத்,
ஈராக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள குர்திஸ் பிராந்தியத்தின் தலைநகர் இர்பில் நகரில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே பிரபல ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஈராக்குக்கான துருக்கி துணை தூதர் மற்றும் 2 தூதரக அதிகாரிகள் உணவு அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர்கள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன்பின்னர் தாக்குதல் நடத்திய 3 பேரும் ஓட்டலின் பின்புறமாக தப்பி ஓடினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் துணை தூதரும், தூதரக அதிகாரிகள் இருவரும் பலியாகினர்.
தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து ஈராக் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஈராக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள குர்திஸ் பிராந்தியத்தின் தலைநகர் இர்பில் நகரில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே பிரபல ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஈராக்குக்கான துருக்கி துணை தூதர் மற்றும் 2 தூதரக அதிகாரிகள் உணவு அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர்கள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன்பின்னர் தாக்குதல் நடத்திய 3 பேரும் ஓட்டலின் பின்புறமாக தப்பி ஓடினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் துணை தூதரும், தூதரக அதிகாரிகள் இருவரும் பலியாகினர்.
தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து ஈராக் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story