உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 19 July 2019 10:45 PM GMT (Updated: 19 July 2019 8:05 PM GMT)

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஐ எட்டி உள்ளது.


* நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஐ எட்டி உள்ளது. மேலும் 29 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

* அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை துருக்கி வாங்கியதால், அந்தநாட்டுக்கு எப்-35 ரக போர் விமானங்களை விற்கப்போவதில்லை என அமெரிக்கா அறிவித்தது. இந்த நிலையில், துருக்கி விருப்பம் தெரிவித்தால் அந்நாட்டுக்கு சுகோய் சூ-35 விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

* ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு மர்ம நபர் தீவைத்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

* நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகருக்கு உட்பட்ட நார்த்வுட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், கியாஸ் கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதில் அந்த வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Next Story