இத்தாலியில் எரிமலை வெடித்ததால் 2 விமான நிலையங்கள் மூடல்
தினத்தந்தி 20 July 2019 6:45 PM GMT (Updated: 20 July 2019 5:31 PM GMT)
Text Sizeஇத்தாலியில் எரிமலை வெடித்ததால் 2 விமான நிலையங்கள் மூடப்பட்டன.
ரோம்,
இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள எத்னா எரிமலை நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வெடித்தது. இதனால் 1.5 கி.மீ. தொலைவுக்கு எரிமலைக்குழம்பு பரவி உள்ளது. மேலும் சாம்பலும், கரும்புகையும் பரவி வருவதால் அருகில் உள்ள 2 விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. எனினும் எரிமலைக்கு அருகில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள எத்னா எரிமலை நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வெடித்தது. இதனால் 1.5 கி.மீ. தொலைவுக்கு எரிமலைக்குழம்பு பரவி உள்ளது. மேலும் சாம்பலும், கரும்புகையும் பரவி வருவதால் அருகில் உள்ள 2 விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. எனினும் எரிமலைக்கு அருகில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire