உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 23 July 2019 10:30 PM GMT (Updated: 23 July 2019 4:52 PM GMT)

* ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் உள்நாட்டு படையுடன் நேட்டோ படை இணைந்து நடத்திய வான்தாக்குதலில் ஒரு பெண் மற்றும் குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர்.

* ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள தந்தர் லெங்கே நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கபாரோவெஸ்க் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடில்களில் திடீரென தீப்பிடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தார். மேலும் 5 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

* நேபாளத்தின் குல்மி மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர்.

Next Story