பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளியில் சிக்கி 3 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பலி


பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளியில் சிக்கி 3 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பலி
x
தினத்தந்தி 4 Aug 2019 10:45 PM GMT (Updated: 4 Aug 2019 8:30 PM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளியில் சிக்கி 3 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன.


* பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட இலோயிலோ-குய்மாராஸ் ஜலசந்தி அருகே சென்று கொண்டிருந்த 3 படகுகள் சூறாவளியில் சிக்கி கவிழ்ந்ததில் 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

* ஆப்கானிஸ்தானின் தக்ஹர் மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே சமயம் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

* ‘பிரெக்ஸிட்’ குறித்து மறுபேச்சுவார்த்தை நடத்த மறுப்பு தெரிவித்து வரும் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் தங்களின் இந்த முடிவை கைவிட வேண்டும் என இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.


Next Story