அமெரிக்காவில் வால்மார்ட் கடையில் துப்பாக்கிச்சூடு: புதிய தகவல்; சொந்த சகோதரியும் சுட்டுக்கொல்லப்பட்டார்


அமெரிக்காவில் வால்மார்ட் கடையில் துப்பாக்கிச்சூடு: புதிய தகவல்; சொந்த சகோதரியும் சுட்டுக்கொல்லப்பட்டார்
x
தினத்தந்தி 5 Aug 2019 11:07 AM GMT (Updated: 5 Aug 2019 11:07 AM GMT)

ஓஹியோ துப்பாக்கிச்சூட்டை நடத்திய கானர் பெட்ஸ் தனது சகோதரி மற்றும் 8 பேரையும் 30 வினாடிகளுக்குள் கொன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

ஹூஸ்டன்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவில் நடந்த இரட்டை துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். அதில் ஓரிகான் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய  24 வயதான கானர் பெட்ஸ் குண்டு துளைக்காத ஆடை, முகமூடி மற்றும் செவிப்புலன் பாதுகாப்பு கருவி மற்றும் குறைந்தது 100 தோட்டா சுற்றுகளை ஏந்தி வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொலிஸ்மா அதிபர் ரிச்சர்ட் பீஹல் கூறுகையில், துப்பாக்கி ஏந்திய நபர் தனது சொந்த சகோதரியான மேகன் பெட்ஸ் மற்றும் 8 பேரையும் அரை நிமிடத்திற்குள் சுட்டுக்கொலை செய்தார் என கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கானர் பெட்ஸ் எதற்காக துப்பாக்கிச்சூட்டை தொடங்கினார் என்று அதிகாரிகளால் பதிலளிக்க முடியவில்லை.

Next Story