துப்பாக்கி விற்பனை சோதனைகள் குறித்து பேச்சுவார்த்தை ; டிரம்ப்


துப்பாக்கி விற்பனை சோதனைகள் குறித்து பேச்சுவார்த்தை ; டிரம்ப்
x
தினத்தந்தி 9 Aug 2019 3:07 PM GMT (Updated: 9 Aug 2019 3:07 PM GMT)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துப்பாக்கி விற்பனை சோதனைகள் குறித்து தீவிரமான விவாதங்கள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 31 பேர் பலியாகினர். இதனையடுத்து துப்பாக்கி பயன்பாடு தொடர்பாக கட்டுப்பாடுகளை கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இப்போது, துப்பாக்கி விற்பனை செய்வதை கட்டுப்படுத்த, கண்காணிக்க மிகவும் வலுவான கருத்துக்கள் அமெரிக்க தேசிய துப்பாக்கி சங்கத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என டொனால்டு டிரம் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் துப்பாக்கி விற்பனையின் பின்னனி ஆய்வுகளை விரிவாக்குவது குறித்து தீவிரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story