பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சுவர் இடிந்ததில் 5 பேர் பலி
பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தின் வளாக சுவர் இடிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
பெஷாவர்,
பாகிஸ்தான் நாட்டில் இன்று 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் அமைந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் அந்நாட்டு ராணுவ கண்காணிப்பின் கீழ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இதில் திடீரென வளாக சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் கில்ஜித் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story