ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 அளவாக பதிவு


ஜப்பானில் நிலநடுக்கம் :  ரிக்டரில் 5.4 அளவாக பதிவு
x
தினத்தந்தி 15 Aug 2019 9:37 AM GMT (Updated: 15 Aug 2019 9:37 AM GMT)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆமோரி நகரில் 5.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.

டோக்கியோ, 

ஜப்பானில் கடந்த வாரம் முதல் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து தலைநகர் டோக்கியோவிலுள்ள  ஆமோரி நகரில் 5.4  ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்த மாதத்தில் ஏற்பட்டுள்ள 5-வது நிலநடுக்கம் ஆகும்.

கடந்த ஜூன் மாதத்தில் 55 முறையும், கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சுமார் 90 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் ஏற்பட்டதாக  ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story