காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்


காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
x
தினத்தந்தி 21 Aug 2019 12:26 PM GMT (Updated: 21 Aug 2019 12:26 PM GMT)

காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை பாகிஸ்தான் எதிர்த்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.வில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள பிரான்சிடம் பாகிஸ்தான் புகார் கூறியது. 

புகார் கூறிய பாகிஸ்தானிடம், காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என பிரான்ஸ்  பதிலளித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி லீ டிரியான் மற்றும் பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரேஷி ஆகியோர் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் பிரான்ஸ் நிலைப்பாட்டை விளக்கிய லீ டிரியான், "இது இருநாடுகள் இடையிலான விவகாரம், இருதரப்பு இடையிலான அரசியல் பேச்சுவார்த்தையின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என கூறியுள்ளார். பதட்டங்களை அதிகரிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் இருதரப்பும் தவிர்ப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார் லீ டிரியான்.

Next Story