நிரவ் மோடியின் காவல் செப்.19 வரை நீட்டிப்பு


நிரவ் மோடியின் காவல் செப்.19 வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 10:43 AM GMT (Updated: 22 Aug 2019 10:43 AM GMT)

லண்டனில் சிறையில் உள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

லண்டன், 

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

பின்னர் நிரவ் மோடி,  லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை, லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்ததுடன், நீதிமன்றக் காவலை நீட்டித்தது.

இந்நிலையில் நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக  வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. 

Next Story