இந்தியாவிற்கு வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - பாகிஸ்தான்


இந்தியாவிற்கு வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - பாகிஸ்தான்
x
தினத்தந்தி 29 Aug 2019 9:36 AM GMT (Updated: 29 Aug 2019 10:55 AM GMT)

இந்திய விமானங்களுக்கு தங்கள் வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதலான போக்கு நிலவுகிறது. இந்தியாவுடன் மோதலான போக்கை கடைப்பிடிக்கும் பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு அதனுடைய வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்காத வகையில் தடைவிதிக்க பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்திய விமானங்களுக்கு தங்கள் வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான ஆலோசனையை மேற்கொண்ட பின்னர் முடிவு எடுக்கப்படும். அனைத்து காரணிகளையும் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி கூறியுள்ளார். 

Next Story