ஈரானின் துல்லிய செயற்கைகோள் புகைப்படம்: அமெரிக்க கண்காணிப்பு ரகசியங்களை வெளியிடும் டொனால்டு டிரம்ப்
டிரமப் வெளியிட்ட ஈரான் செயற்கைகோள் புகைப்படம் அமெரிக்க கண்காணிப்பு ரகசியங்களை வெளியிடுவது குறித்த கவலையை எழுப்பி உள்ளது.
வாஷிங்டன்
வடக்கு ஈரானில் உள்ள செம்னான் விண்வெளி மையத்தில் ஏவுதளத்தில் வியாழக்கிழமை ராக்கெட் வெடித்ததாக கூறப்பட்டது. இது குறித்த செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியாகின் ஆனால் இது குறித்து ஈரான் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தோல்வியுற்ற ஈரானிய ராக்கெட் ஏவுதலின் புகைப்படத்தை வெளியிட்டு அமெரிக்காவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி இருந்தார்.
டிரம்ப் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைகோள் படத்தை டுவீட் செய்து இருந்தார். அதில் சேதமடைந்த வாகனங்கள் மற்றும் ஏவுதள கேன்ட்ரி ஆகியவற்றைக் குறிக்கும் சிறுகுறிப்புகள், ஈரானின் சஃபிர் செயற்கைக்கோள் ராக்கெட்டை உள்ளடக்கியதாக இருந்தது.
The United States of America was not involved in the catastrophic accident during final launch preparations for the Safir SLV Launch at Semnan Launch Site One in Iran. I wish Iran best wishes and good luck in determining what happened at Site One. pic.twitter.com/z0iDj2L0Y3
— Donald J. Trump (@realDonaldTrump) August 30, 2019
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல மாதங்களாக ஏற்பட்ட பதற்றங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ட்ரம்ப் கடந்த ஆண்டு ஒருதலைப்பட்சமாக 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.
பொதுவில் செயற்கைக்கோள் புகைப்படத்தில் அதன் ஏவுதளத்தில் ராக்கெட் வெடித்ததாகத் தெரிகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இரண்டு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வைக்கத் தவறியதை அடுத்து, ஈரான் ஒரு செயற்கைக்கோளை விண்வெளியில் அனுப்ப மூன்றாவது முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஈரானின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முகமது ஜவாத் அசாரி ஜஹ்ரோமி ஒரு செயற்கைக்கோள் இழந்துவிட்டதாக வெளியான செய்திகளை நிராகரித்தார், ஆனால் ஏவுகணை-ஏவுதளம் வெடிப்பு குறித்து எதுவும் கூறவில்லை.
செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைப்பதற்கான மூன்றாவது முயற்சி தோல்வியுற்றதாக செய்திகள் வந்தன. உண்மையில், நஹித் 1 சரியாக உள்ளது, இப்போது ஆய்வில் உள்ளது. நிருபர்களும் ஆய்வகத்தைப் பார்வையிடலாம். வெளிப்படைத்தன்மை, ”என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
ஈரானிய விண்வெளி நடவடிக்கைகள் குறித்தும் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் முன்னேற்றம் குறித்து அமெரிக்கா தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.
ஈரான் தனது ராக்கெட் திட்டம் விண்வெளியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது என்று கூறுகிறது. இருப்பினும், ராக்கெட்டுகள் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு ஒத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், அமெரிக்கா ஈரான் செயல்பாடுகளை சந்தேகத்துடன் பார்க்கிறது.
ஏவுதளத்தின் புகைப்படம் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையின் உளவுத்துறை கூட்டத்தில் காட்டப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக சிஎன்பிசி தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகுதியில் செய்தியாளர்களிடம் கூறும் போது படத்தை வெளியிடும் அதிகாரம் தனக்கு இருப்பதாக கூறினார்.
"அவர்களுக்கு ஒரு பெரிய சிக்கல் உள்ளது என " ஈரானின் ஏவுதலைப் பற்றி அவர் கூறினார். "எங்களிடம் ஒரு புகைப்படம் இருந்தது, அதை வெளியிட்டேன், அதை செய்ய எனக்கு உரிமை இருந்தது. என கூறினார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கார்ப்ஸ் வளைகுடாவில் எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட பயன்படுத்திய தரவுத்தளத்திற்கு எதிராக ஜூன் மாதத்தில் அமெரிக்கா ஒரு ரகசிய சைபர் தாக்குதலை நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது, இது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் சைபர் போர் என கூறி உள்ளது.
Related Tags :
Next Story