அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி


அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
x
தினத்தந்தி 1 Sep 2019 1:09 AM GMT (Updated: 1 Sep 2019 1:09 AM GMT)

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஹூஸ்டன்,

அமெரிக்காவின் டெக்சாசில் மிட்லேண்டு பகுதி அருகே லாரி ஒன்றை 2 பேர் கொண்ட கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.  அவர்கள் பொதுமக்கள் மீதும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  21 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்து கடத்தல்காரர்களை பிடிக்க காவல் துறையினர் உடனடியாக சென்றனர்.  அவர்கள், சினெர்ஜி என்ற திரையரங்கு அருகே கடத்தல்காரர்களில் ஒருவரை சுட்டு கொன்றனர்.  அந்நபருக்கு 30 வயது இருக்கும் என போலீசார் கூறினர்.

அதிபர் டொனால்டு டிரம்பிற்கு இந்த சம்பவம் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.  இது முட்டாள்தன மற்றும் கோழைத்தனம் நிறைந்த செயல்.  இந்த மன்னிக்க முடியாத செயலை செய்தவர்களுக்கு நீதி கிடைக்கும் என டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறியுள்ளார்.

Next Story