படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான இரண்டு வருட விசா -இங்கிலாந்தில் மீண்டும் அறிமுகம்


படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான இரண்டு வருட விசா -இங்கிலாந்தில் மீண்டும் அறிமுகம்
x
தினத்தந்தி 11 Sep 2019 12:00 PM GMT (Updated: 11 Sep 2019 12:00 PM GMT)

படிப்புக்கு பிந்தைய பயிற்சி, வேலைக்கான இரண்டு வருட விசாவை இங்கிலாந்து மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்து உள்ளது.

லண்டன்,

சர்வதேச மாணவர்களுக்கான இரண்டு வருட  படிப்புக்கு பிந்தைய  வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு  செய்துள்ளது. இது திறமையான மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்குப் பிறகு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

2012-ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தால் பணி விசா ரத்து  செய்யப்பட்டது, சர்வதேச மாணவர் சேர்க்கை பாதிப்பை ஏற்படுத்தியது, ஏனெனில் அவர்கள் படிப்பை முடித்து நான்கு மாதங்களிலேயே வெளியேற வேண்டியிருந்தது.

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் தீவிர விவாதம் மற்றும் கோரிக்கைக்கு பின்னர் மற்ற நாடுகளில்  திறமைகளை இழக்க நேரிடும் என்று அஞ்சிய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விசா 2020-21 ஆண்டு மாணவர்களுக்கு பொருந்தும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள்  திறமைக்கு தகுந்தவாறு திறமையான பணி விசாவிற்கு மாற முடியும். 2012-ஆம் ஆண்டு போலன்றி, இந்த புதிய பாதையில் உண்மையான, நம்பகமான மாணவர்கள் மட்டுமே தகுதி பெறுவதை உறுதி செய்வதற்கான பாதுகாப்புகளும் அடங்கும்.

இது குறித்து இந்தியாவின் இங்கிலாந்து தூதர் சர் டொமினிக் அஸ்கியூத் இந்திய மாணவர்களுக்கு இது ஒரு அருமையான செய்தி, அவர்கள் இப்போது பட்டப்படிப்பை முடித்த பின்னர் யு.கே.யில் அதிக நேரம் செலவிட முடியும்,  மேலும் திறன்களையும் அனுபவத்தையும் பெற அனுமதிக்கிறது என கூறினார்.

 இங்கிலாந்து இன்டர்நேஷனல் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், வேலை விசாவை  மீண்டும் அறிமுகப்படுத்துவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.

தற்போது வரை 19,750 இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில்  உள்ளனர், 19,750 மாணவர்களில் 11,255 பேர் முதுகலை படிப்புகளையும், 1,555 பேர் முதுகலை ஆராய்ச்சி படிப்புகளிலும், 6,945 பேர் இளங்கலை படிப்புகளிலும் உள்ளனர் என்று உயர் கல்வி புள்ளிவிவர நிறுவனம் (ஹெசா) தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடவடிக்கையால் இந்தியாவிலிருந்து சிறந்த திறமைகளை ஈர்ப்பதற்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் பணியாற்ற அதிக வாய்ப்புகளைத் திறப்பதற்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என இங்கிலாந்துபலகலைக்கழகங்கள் தெரிவித்து உள்ளன.   

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கான பிரிட்டிஷ் துணை உயர் தூதர் ஆண்ட்ரூ ஃப்ளெமிங் இந்த நடவடிக்கையை வரவேற்று, இந்திய மாணவர்கள் குறிப்பாக மகிழ்ச்சியடைவார்கள். இங்கிலாந்து விசாவிற்கு விண்ணப்பித்த  இந்தியர்களில் 96 சதவீதம் பேர் வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.

Next Story