கராச்சியை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தானுக்கு கண்டனம்


கராச்சியை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் :  ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தானுக்கு கண்டனம்
x
தினத்தந்தி 13 Sep 2019 5:52 AM GMT (Updated: 13 Sep 2019 12:26 PM GMT)

கராச்சியின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் என ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தான் ரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கராச்சி,

கராச்சியின் நிர்வாக விவகாரங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் மத்திய அரசு  பரிசீலிப்பதாக பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரோக் நசீம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும்  சமூக ஊடகங்களில்  கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பாகிஸ்தான் கராச்சியில் 149 வது பிரிவை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், #SindhRejectsKarachiCommittee "மற்றும்" #UnitedSindhUnitedPakistan "போன்ற ஹேஷ்டேக்குகள் பாகிஸ்தானில் வைரலாகி உள்ளன.

பொது மக்களைத் தவிர, பல அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் 149 வது பிரிவைச் செயல்படுத்த மத்திய அரசின் திட்டத்தை கண்டித்துள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி கூறும்போது, "இந்தியாவுக்கு எதிராக ஒரு கதையை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது, இதற்கிடையில் கராச்சி  விவகாரத்தில் இதனை செய்து உள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நீங்கள் ஒரு கதையை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். அவர் அரசியலமைப்பற்ற முறையில் காஷ்மீரைக் கைப்பற்றினார். அதே நேரத்தில் நீங்கள் கராச்சியை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறீர்கள். இது வினோதமானது" என கூறி உள்ளார்.

இதற்கிடையில், பொதுமக்களின் கருத்தை முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் அரசாங்கத்தின் திட்டத்தை "அழுக்கு தந்திரம்" என்று ட்விட்டர்வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

"கராச்சி சிந்துவின் ஒரு பகுதி, யாராவது சிந்துவைப் பிரிக்க முயன்றால் நாங்கள் பாகிஸ்தானை 4 பகுதிகளாகப் பிரிப்போம்" என்று ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.

Next Story