ஏமனில் வான்வழி தாக்குதல்கள்; 7 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
ஏமனில் நடந்த வான்வழி தாக்குதல்களில் 7 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
சனா,
ஏமன் நாட்டில் தெற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், தலே மாகாணத்தில் நடந்த இரட்டை வான்வழி தாக்குதல்களில் 7 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 4 பெண்களும் அடங்குவர். இந்த தகவலை இப் மாபாணத்தில் உள்ள அல் தாவ்ரா மருத்துவமனையில் உள்ள டாக்டர் ஒருவர் மற்றும் பெயர் வெளியிட விருப்பமில்லாத உள்ளூர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story