அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை


அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை
x
தினத்தந்தி 4 Oct 2019 9:22 PM GMT (Updated: 4 Oct 2019 9:22 PM GMT)

அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள போஷ் கலிபோர்னியாவை சேர்ந்தவர் துஷார் அட்ரே (வயது 50). இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரரான இவர் ஆன்லைன் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்திவந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் வீட்டில் மேலும் சிலருடன் இருந்தார். அப்போது சந்தேகப்படும் நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த அவரது தோழியின் காரில் அவரை கடத்திச் சென்றனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அவரை தேடிவந்தனர்.

சில மணி நேரத்தில் அந்த கார் அருகில் உள்ள மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. காரின் அருகில் துஷார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். பணத்துக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Next Story