சீனாவில் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு


சீனாவில் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 10:30 PM GMT (Updated: 9 Oct 2019 8:10 PM GMT)

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் போஸ்கவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.

* சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் போஸ்கவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் செகிலியான் பிராந்தியத்தில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

* வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த சவுதி அரேபியா விரும்பினால் அதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி முகமத் ஜாவத் ஷாரிப் கூறினார்.

* சீனாவில் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், இதற்கு காரணமான சீன அரசு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Next Story