லண்டன் பிரபல வணிக வளாகத்தில் 5 பேருக்கு கத்தி குத்து - சந்தேக நபர் கைது
லண்டன் பிரபல வணிக வளாகத்தில் 5 பேரை கொடுரமாக கத்தியால் குத்தப்பட்டனர். சந்தேகிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
லண்டன்,
லண்டன் நகரின் மான்செஸ்டர் பகுதியில் பிரபல வணிக வளாகத்தில் இன்று கலை 11.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் 5 பேரை கொடுரமாக கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார்.
தகவல் அறிந்தவுடன் லண்டன் பயங்கரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 40 வயது சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.
காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இதே வணிக வளாகத்தில் பயங்கரவாத தற்கொலைப்படை குண்டு வெடிப்பு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். தற்போது நடைபெற்ற சம்பம் தீவிரவாத செயலாக இருக்கலாம் என்று போலிஸ் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
லண்டன் நகரின் மான்செஸ்டர் பகுதியில் பிரபல வணிக வளாகத்தில் இன்று கலை 11.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் 5 பேரை கொடுரமாக கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார்.
தகவல் அறிந்தவுடன் லண்டன் பயங்கரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 40 வயது சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.
காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இதே வணிக வளாகத்தில் பயங்கரவாத தற்கொலைப்படை குண்டு வெடிப்பு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். தற்போது நடைபெற்ற சம்பம் தீவிரவாத செயலாக இருக்கலாம் என்று போலிஸ் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story