மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதி மீது தாக்குதல்; 16 பேர் பலி


மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதி மீது தாக்குதல்; 16 பேர் பலி
x
தினத்தந்தி 12 Oct 2019 4:23 PM GMT (Updated: 12 Oct 2019 4:23 PM GMT)

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ நகரில் மசூதி மீது நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

பர்கினோ பசோ,

மேற்கு ஆப்பிரிக்காவின் பர்கினோ பசோ நகரில் சல்மோசி என்ற பகுதியில் உள்ள பெரிய மசூதி ஒன்றின் மீது ஆயுதமேந்திய சில நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்தில் 13 பேரும், பின்னர் 3 பேரும் என 16 பேர் பலியாகி உள்ளனர்.  காயமடைந்த 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story