ஆப்கானிஸ்தான் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி


ஆப்கானிஸ்தான் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி
x
தினத்தந்தி 18 Oct 2019 5:30 PM GMT (Updated: 18 Oct 2019 5:30 PM GMT)

ஆப்கானிஸ்தான் மசூதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 62 பேர் பலியாகி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டம் உள்ளது. இங்குள்ள ஜா தரா பகுதியில் உள்ள மசூதிக்கு வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு இன்று பொதுமக்கள் சென்றனர்.

அங்கு அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த கொடூர குண்டுவெடிப்பில் 28 பேர் சம்பவ இடத்திலயே பலியானதாகவும்,  50 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story