டிசம்பர் 12-ந்தேதி தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்தது


டிசம்பர் 12-ந்தேதி தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்தது
x
தினத்தந்தி 29 Oct 2019 5:37 AM GMT (Updated: 29 Oct 2019 5:37 AM GMT)

பிரெக்சிட் நீட்டிப்பை டிசம்பர் 12-ந்தேதி தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்தது.

லண்டன்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் திங்களன்று இங்கிலாந்தின்  பிரெக்சிட் நீட்டிப்பை   மூன்று மாதங்கள் வரை (ஜனவரி 31 வரை) ஒத்திவைக்க ஒப்புக் கொண்டன. ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றம் டிசம்பர் 12 தேர்தல் நடத்தும்  பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியை நிராகரித்தது.

ஜான்சன் டிசம்பர் 12 ம் தேதி தேர்தலை நடத்துவதற்கான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.  இது "பிரெக்சிட்டை முடிக்கும்" நேரம் என்று கூறினார். டிசம்பர் 12 தேர்தலை  நடத்தும் ஜான்சனின் முயற்சிக்கு ஆதரவாக 299 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

ஜான்சன் தோல்வி அடைந்ததால்  அவர் இப்போது ஒரு தேர்தலுக்கு வேறு வழியைத் தேடுவார் .

Next Story