ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி


ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 2 Nov 2019 9:43 AM GMT (Updated: 2 Nov 2019 9:43 AM GMT)

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 9 மாணவர்கள் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் டாகார் மாகாணத்தில் உள்ள தர்காத் மாவட்டத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் 9 பேர் பலியாகினர். 

மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்த வழியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story