ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 ராணுவ வீரர்கள் பலி


ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 ராணுவ வீரர்கள் பலி
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 10:16 PM GMT)

ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர்.


* ஆப்கானிஸ்தானின் பதக் ஷான் மாகாணத்தில் நசாய் மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனைசாவடி மீது நேற்று முன்தினம் மாலை தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள், 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

* ஈரான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதை தொடர்ந்து அவ்விரு நாடுகள் இடையே விரோதப்போக்கு நிலவுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஈரான் மத தலைவர் அயத்துல்லா அலி காமேனி உறுதிபட தெரிவித்துள்ளார்.

* வங்காளதேசத்தில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், கிரமீன் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் ஊழியர்கள் 3 பேரை பணி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் அவருக்கு டாக்கா தொழிலாளர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

* ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் சீன அரசின் செய்தி நிறுவனம் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஹாங்காங் பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* ரஷிய விண்வெளி வீரர் செர்கெய் கிரிகாலெவ்விற்கு ஜப்பான் அரசு ‘ரைசிங் சன்’ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

Next Story