சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடரும் - அமெரிக்க ராணுவம்


சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடரும் - அமெரிக்க ராணுவம்
x
தினத்தந்தி 5 Nov 2019 10:19 PM GMT (Updated: 5 Nov 2019 10:19 PM GMT)

சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


* சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடரும் என்றும், 1,000 எண்ணிக்கைக்கு கீழாகவே அமெரிக்க படைகள் சிரியாவில் இருப்பார்கள் என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

* அமெரிக்கா-சீனா இடையிலான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வரும்படி சீன அதிபர் ஜின்பிங்குக்கு ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுப்பார் என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

* ஸ்பெயின் நாட்டில் தனிநாடு கோரி போராடி வரும் கேட்டலேனியா பிரிவினைவாதிகள், அந்த நாட்டின் அரசர் பெலிப் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. இது தொடர்பான தங்கள் நோக்கத்தை விளக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை ஐ.நா.விடம் அமெரிக்கா அளித்தது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்குள் பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறும்.


Next Story