நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்


நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 6 Nov 2019 11:52 AM GMT (Updated: 6 Nov 2019 11:52 AM GMT)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருக்கு வீட்டில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாகூர்,

மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். பனாமா கேட் ஊழல் வழக்கில், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  சிறையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. 

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது நவாஸ் ஷெரீப் வீடு திரும்பி இருக்கிறார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப் உடல்நிலை  தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. நவாஸ் ஷெரீப்பை பார்வையாளர்கள் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அவரது செய்தி  தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story