அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம்


அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2019 11:15 PM GMT (Updated: 12 Nov 2019 8:50 PM GMT)

அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம் வழங்கப்பட்டது.

சிகாகோ,

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சிகாகோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தேனி தொகுதி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார், தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல், நெபர்வல்லியில் உள்ள மூத்த குடிமகன்களுக்கான மெட்ரோபாலிட்டன் ஏசியா பேமிலி சர்வீசஸ் மையத்தின் சார்பில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவருக்கு ‘மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்’ என்ற பதக்கம் வழங்கப்பட்டது.

அவரது மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத்குமாருக்கு மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.


Next Story