ரஷ்யாவில் கல்லூரி வளாகத்துக்குள் துப்பாக்கி சூடு; மாணவர் பலி


ரஷ்யாவில் கல்லூரி வளாகத்துக்குள் துப்பாக்கி சூடு; மாணவர் பலி
x
தினத்தந்தி 14 Nov 2019 12:21 PM GMT (Updated: 14 Nov 2019 12:21 PM GMT)

ரஷ்யாவில் கல்லூரி வளாகத்துக்குள் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

மாஸ்கோ,

ரஷ்யாவின் பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் 19 வயதான மாணவர், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தி இன்று சக மாணவரை சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.

இதில் உடன் பயின்ற மாணவர் உயிரிழந்ததோடு, மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  மாணவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Next Story