பாகிஸ்தானில் மின்னல் தாக்கி, 23 பேர் உயிரிழந்தனர்
தினத்தந்தி 15 Nov 2019 6:13 AM GMT (Updated: 15 Nov 2019 6:13 AM GMT)
Text Sizeபாகிஸ்தானில் ஏற்பட்ட தொடர் மழையின் போது மின்னல் தாக்கி, 23 பேர் உயிரிழந்தனர்.
மித்தி,
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், தார்பார்க்கர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் இடையே பயங்கர மின்னல் ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள மித்தி, சாச்சீ , ராம்சிங் சோதா ஆகிய கிராமங்களை அடுத்தடுத்து, பயங்கர இடி முழக்கத்துடன் மின்னல் தாக்கியது.
இதில் 10 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள், மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire