சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 15 தொழிலாளர்கள் பலி


சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 15 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 19 Nov 2019 7:49 PM GMT (Updated: 19 Nov 2019 7:49 PM GMT)

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 15 தொழிலாளர்கள் பலியாகினர்.

பீஜிங்,

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாங்சி மாகாணத்தில் பிங்யாவ் நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் வழக்கம் போல் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நிலக்கரி சுரங்கத்துக்குள் கியாஸ் கசிந்து பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் சுரங்கத்துக்குள் தீப்பிடித்தது. பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி சுரங்கத்தை விட்டு வெளியே ஓடினர்.

எனினும் தொழிலாளர்கள் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story