ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 தீவிரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 தீவிரவாதிகள் பலி
x
தினத்தந்தி 25 Nov 2019 10:13 AM GMT (Updated: 25 Nov 2019 10:13 AM GMT)

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தலீபான் தளபதி உள்பட 10 தீவிரவாதிகள் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் கண்டஸ் மாகாணத்தில் ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதில் தலீபான் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தலீபான் தளபதி மவுலவி முபாஷீர் என்பவரும்  கொல்லப்பட்டதாக ஆப்கான் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தலீபான் அமைப்பிடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக நேற்று காலை ஆப்கானிஸ்தானின் ஆர்ச்சி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேரும், தீவிரவாதிகள் 6 பேரும் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story