வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி


வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
x
தினத்தந்தி 11 Dec 2019 7:45 PM GMT (Updated: 11 Dec 2019 7:37 PM GMT)

இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜி, வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்றார். அவரது மனைவியும் சேலையில் வந்து அசத்தினார்.

ஸ்டாக்ஹோம்,

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், அமெரிக்க பொருளாதார நிபுணருமான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டுப்லோ மற்றும் மைக்கேல் கிரிமர் ஆகிய 3 பேருக்கு இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பரிசளிப்பு விழா சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. விழாவில் பரிசு பெற வந்த அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவியும் இந்திய பாரம்பரிய முறையில் உடையணிந்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அபிஜித் பானர்ஜி, தங்க நிற பார்டர் வைத்த வேட்டியும், கருப்பு நிற மேல் கோட்டும் அணிந்திருந்தார். அவரது மனைவி எஸ்தர் டுப்லோ பச்சை மற்றும் ஊதா நிற சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இந்திய பெண்ணை போன்று எஸ்தர் புடவை அணிந்து வந்து பரிசு பெற்றது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. டுவிட்டரிலும் இந்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Next Story