இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக அறிவிப்பு


இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 8:35 PM GMT (Updated: 14 Dec 2019 8:35 PM GMT)

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக ஐ.நா. பொதுச்சபை அறிவித்துள்ளது.

நியூயார்க்,

இத்தாலியில் உள்ள மிலான் நகரில் 2015-ம் ஆண்டு நடந்த உணவு மற்றும் விவசாய அமைப்பின் அரசுகளுக்கு இடையேயான குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சர்வதேச தேநீர் தினம் என ஒரு நாளை அறிவித்து கடைப்பிடிக்க வகை செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது.

இதை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டு விட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21-ந்தேதியன்று சர்வதேச தேநீர் தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. பொதுச்சபை அறிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச்சபை விடுத்த அறிவிக்கையில், “சர்வதேச தேநீர் தினத்தை கடைப்பிடிப்பது தேயிலையின் நிலையான உற்பத்தி, தேயிலை பயன்பாடுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும், வளர்க்கும்; பசி மற்றும் வறுமையை எதிர்த்து போராடுவதில் அதன் முக்கியத்துவத்தைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். எனவே மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

Next Story