ரஷியாவில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி


ரஷியாவில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி
x
தினத்தந்தி 20 Dec 2019 10:40 PM GMT (Updated: 20 Dec 2019 10:40 PM GMT)

ரஷியாவில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

மாஸ்கோ,

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அந்த நாட்டின் மத்திய பாதுகாப்பு படையின் தலைமையகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தலைமையகத்துக்கு வெளியே பாதுகாப்பு படை அதிகாரிகள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென பாதுகாப்பு படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அதிகாரி ஒருவரின் உடலில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட நபருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே சமயம் இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story