175 குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 34 பாதிரியார்கள்


175 குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 34 பாதிரியார்கள்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:45 AM GMT (Updated: 23 Dec 2019 11:45 AM GMT)

மெக்சிகோவிலுள்ள சர்ச் ஒன்றில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியார்கள் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மெக்சிகோ சிட்டி,

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சில், பாதிரியார்களால் குறைந்தது 175 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட உள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1941ல் இருந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதில், 175 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரிய வந்துள்ளது. அந்த சர்ச்சை உருவாக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும், 60 குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரைத் தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாதிரியார் மேசியலை, போப் பதினாறாம் பெனடிக், கடந்த 2006ம் ஆண்டு ஓய்வு பெற உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளாமலேயே மேசியல் கடந்த 2008ம் ஆண்டு மறைந்தார்.

Next Story