தென்கொரியா தொழிற்சாலையில் வெடிவிபத்து ; 5 தொழிலாளர்கள் காயம்


தென்கொரியா தொழிற்சாலையில் வெடிவிபத்து ; 5 தொழிலாளர்கள் காயம்
x
தினத்தந்தி 24 Dec 2019 9:11 AM GMT (Updated: 24 Dec 2019 9:11 AM GMT)

தென்கொரியாவில் உள்ள தொழிற்சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

சியோல்,

தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் இருந்து தென்மேற்கே 420 கி.மீ. தொலைவில் குவாங்யாங் நகரில் ஸ்டீல் நிறுவன தொழிற்சாலை ஒன்று அமைந்து உள்ளது.

இங்கு திடீரென இன்று மதியம் 1.14 மணியளவில் அடுத்தடுத்து 2 வெடிவிபத்துகள் ஏற்பட்டன.

இதில் தொழிலாளர்கள் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள  பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்பின் 50 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  தீ விபத்திற்கான சரியான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை.

Next Story