இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண், 2 குழந்தைகள் சாவு


இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண், 2 குழந்தைகள் சாவு
x
தினத்தந்தி 29 Dec 2019 10:48 PM GMT (Updated: 29 Dec 2019 10:48 PM GMT)

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ரோம்,

இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஆஸ்திரிய எல்லைக்கு அருகேயுள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது. அங்கு ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிற 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் பனிச்சறுக்கு பயணம் செய்தனர். இவர்கள் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரில் 2 பேர் சம்பவ இடத்திலேே-யும், ஒருவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியிலும் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மீட்பு பணியில் 70 பேரை கொண்ட குழுவும், 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று அதே இடத்தில் பனிச்சரிவில் சிக்கிய ஒரு தந்தையும், அவரது 11 வயது மகனும் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

Next Story