இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண், 2 குழந்தைகள் சாவு
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ரோம்,
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஆஸ்திரிய எல்லைக்கு அருகேயுள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது. அங்கு ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிற 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் பனிச்சறுக்கு பயணம் செய்தனர். இவர்கள் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரில் 2 பேர் சம்பவ இடத்திலேே-யும், ஒருவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியிலும் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மீட்பு பணியில் 70 பேரை கொண்ட குழுவும், 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று அதே இடத்தில் பனிச்சரிவில் சிக்கிய ஒரு தந்தையும், அவரது 11 வயது மகனும் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஆஸ்திரிய எல்லைக்கு அருகேயுள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது. அங்கு ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிற 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் பனிச்சறுக்கு பயணம் செய்தனர். இவர்கள் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரில் 2 பேர் சம்பவ இடத்திலேே-யும், ஒருவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியிலும் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மீட்பு பணியில் 70 பேரை கொண்ட குழுவும், 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று அதே இடத்தில் பனிச்சரிவில் சிக்கிய ஒரு தந்தையும், அவரது 11 வயது மகனும் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
Related Tags :
Next Story