அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு
மீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
பாக்தாத்|
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3 ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது. இந்த தாக்குதலைதொடந்ர்து அமெரிக்க ராணுவத்தை வெளியேறுமாறு ஈராக் பாராளுமன்றம் கேட்டு கொண்டு உள்ளது.
ஈராக் பாராளுமன்றம் ஜனவரி 5-ம் தேதி வாக்களிப்பு மூலம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. 2014 முதல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போரிட அமெரிக்கா அங்கு முகாமிட்டது. அங்கு சுமார் 5200 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.
அமெரிக்கப் படைகளின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நேற்று இரவு கத்யுஷா ராக்கெட்டுகள் பாக்தாத்திற்கு வடக்கே ஈராக்கிய விமானத் தளத்தை குறிவைத்து தாக்கின. அங்கு அமெரிக்கத் தலைமையிலான கூட்டணிப் படைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தை வெளியேற வலியுறுத்தி ஈராக் தலைவர் மொக்தாதா சதர் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்ட பேரணி நடத்த மக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார். ஈராக்கின் வானம், நிலம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒவ்வொரு நாளும் படைகளை ஆக்கிரமிப்பின் மூலம் மீறப்படுகின்றன என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story