பெரு நாட்டில் பேருந்து விபத்து: 6 பேர் பலி; 37 பேர் காயம்
பெரு நாட்டில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
லிமா,
பெரு நாட்டின் தெற்கே டேம்பில்லோ பகுதியருகே பேனமெரிக்கானா சூர் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியாகினர். 37 பேர் காயமடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெருவில் சாலை விபத்துகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. அந்நாட்டு தேசிய போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2019ம் ஆண்டில் கார் விபத்துகளில் 717 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story