தென் கிழக்கு தான்சானியாவில் வெள்ளப்பெருக்கு : 20 பேர் பலி


தென் கிழக்கு தான்சானியாவில் வெள்ளப்பெருக்கு : 20 பேர் பலி
x
தினத்தந்தி 2 Feb 2020 4:37 PM GMT (Updated: 2 Feb 2020 4:37 PM GMT)

தென் கிழக்கு தான்சானியாவில் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

லிண்டி, 

தென் கிழக்கு  தான்சானியா நாட்டில் உள்ள லிண்டி மாகாணத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000 மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தான்சானியா பகுதி மக்களுக்கு அந்நாட்டு இராணுவம் உதவிகளை செய்து வருகிறது. பெய்து வரும் கனமழையால் உள்ளூர் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. 

Next Story