டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: இரண்டு பெண்கள் பலி


டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு:  இரண்டு பெண்கள் பலி
x

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் பலியாகி உள்ளனர்.

டெக்சாஸ்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று  நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சம்பவம் நடைபெற்ற உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகம் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும்  மாணவர்களும், பேராசிரியர்களும் அடுத்த சில மணி நேரங்களுக்கு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். பல்கலைக்கழத்தின் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக புதன் கிழமை  வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 கடந்த அக்டோபர் மாதம் இதே பல்கலைக்கழகத்தில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில்  துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில்  இரு மாணவிகள் கொல்லப்பட்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Next Story