கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார்


கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார்
x
தினத்தந்தி 4 Feb 2020 9:33 PM GMT (Updated: 4 Feb 2020 9:33 PM GMT)

கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார்.


* ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களான கோர், பட்கிஸ் மற்றும் ஹெரட்டில் 59 தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

* கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. அரப் மோய் மறைவுக்கு கென்ய அதிபர் உகுரு கென்யட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து வரும் பிறநாட்டினருக்கு ர‌ஷியா தற்காலிகமாக தடைவிதித்துள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Next Story