தாய்லாந்தில் ராணுவ வீரர் திடீர் துப்பாக்கி சூடு; 12 பேர் பலி


தாய்லாந்தில் ராணுவ வீரர் திடீர் துப்பாக்கி சூடு; 12 பேர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2020 1:07 PM GMT (Updated: 8 Feb 2020 1:07 PM GMT)

தாய்லாந்து நாட்டில் ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

நாகோன் ராட்சசிமா,

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் வணிக வளாகம் முன்பு கார் ஒன்று வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கிய ராணுவ வீரர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தொடர்ச்சியாக அங்கிருந்த மக்களை நோக்கி சுட தொடங்கினார்.  இதில், 12 பேர் பலியாகி உள்ளனர்.  அவர் நகரின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  சந்தேகத்திற்குரிய அந்நபர் ஜக்ராபந்த் தொம்மா என அறியப்பட்டு உள்ளார்.  அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.  துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story