கொரோனா வைரஸ் பாதிப்பு: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழு சீனா வருகிறது
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மருத்துவக் குழுவை அனுப்பி உள்ளது.
பீஜிங்,
சீனாவின் ஹுபெய் மாகாணம் உகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவில் இந்த தாக்குதலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 40,171 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. 1.87 லட்சம் போ தொடா்ந்து மருத்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 40,600-க்கும் மேற்பட்டோா் பாதிப்படைந்துள்ளனா். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடி வருகின்றனா்.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் தலைமையில் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று இன்று இரவு சீனா வர உள்ளது.
இந்த குழுவினர் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் சீன அதிகாரிகளுக்கு உதவியாக பணியாற்றுவார்கள். முந்தைய பொது சுகாதார அவசரநிலை காலங்களில் பணியாற்றிய மூத்த நிபுணர் புரூஸ் அய்ல்வார்டு இந்த குழுவுக்கு தலைமை தாங்கி உள்ளார்.
கடந்த 4 நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story