கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி
கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
போகோடா,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் இருந்து நேற்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இரட்டை என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story