கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி


கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி
x
தினத்தந்தி 14 Feb 2020 7:14 AM GMT (Updated: 14 Feb 2020 7:14 AM GMT)

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

போகோடா, 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் இருந்து நேற்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இரட்டை என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணம் செய்தனர்.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story