‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது


‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது
x
தினத்தந்தி 14 Feb 2020 7:54 AM GMT (Updated: 14 Feb 2020 7:54 AM GMT)

‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை எட்டியுள்ளது.

சான்பிரான்சிஸ்கோ,

சமூக ஊடக தளமான ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016-ம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தினர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது. 2019-ம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சமூக ஊடக தளங்களில் வாட்ஸ்-அப் 2-வது இடத்தை பிடித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி தீவிர பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக திறக்க முடியாத ‘டிஜிட்டல் லாக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்மூலம் ஹேக்கர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story