தனிமைப்படுத்தப்பட்ட ஜப்பான் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி


தனிமைப்படுத்தப்பட்ட  ஜப்பான் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி
x
தினத்தந்தி 19 Feb 2020 3:42 AM GMT (Updated: 19 Feb 2020 3:48 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

யோகோஹமா, 

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. கப்பலை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் காலக்கட்டம் இன்றுடன் முடிவடைந்தது. 

இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் கப்பலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பது குறித்து ஜப்பான் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. கப்பலில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542  ஆக உள்ளது. 

Next Story